» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பைக் மீது அரசு பஸ் மோதல்: நிலபுரோக்கர் சாவு
திங்கள் 10, பிப்ரவரி 2025 8:17:20 AM (IST)
கயத்தாறில் பைக் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் காயமடைந்த நிலபுரோக்கர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், நாகம்பட்டி வடக்கு தெருவைச் சேர்ந்த சன்முகையா மகன் கந்தசாமி (50). இவர் சம்பவத்தன்று காலையில் கயத்தாறில் இருந்து நெல்லை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றபோது, பின்னால் வந்த அரசு பஸ் எதிர்பாராத விதமாக மோதியதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக இறந்து போனார். இதுகுறித்து கயத்தாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதாதேவி, சப்-இன்ஸ்பெக்டர் காசிலிங்கம் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்துபோன கந்தசாமிக்கு மாரியம்மாள் என்ற மனைவியும் பத்ரகாளி(29) சங்கீதா(27) ஆகிய 2 மகள்களும் கலைச்செல்வன்(28) என்ற ஒரு மகனும் உள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










