» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

இந்திய மருத்துவ சங்கம் சார்பில் மரம் நடும் விழா!

ஞாயிறு 9, பிப்ரவரி 2025 1:43:42 PM (IST)



தூத்துக்குடியில் இந்திய மருத்துவ சங்கம் மற்றும் ஆல் கேன் டிரஸ்ட் சார்பில் மரம் நடும் விழா நடைபெற்றது.

தூத்துக்குடி நகரை பசுமையாக்கும் திட்டத்தின் கீழ் ஆல் கேன் டிரஸ்ட் சார்பில் வாரம்தோறும் மரக்கன்றுகள் நடும் விழா நடந்து வருகிறது. இந்நிலையில் இன்று தூத்துக்குடி இந்திய மருத்துவர்கள் சங்கம் இணைந்து மரக்கன்று நடும் விழா தூத்துக்குடி  பிரையன்ட் நகர் 6வது தெருவில் நடந்தது. நிகழ்ச்சிக்கு டிரஸ்ட் தலைவர் அரசு வழக்கறிஞர் மோகன்தாஸ் சாமுவேல் தலைமை தாங்கினார்.

இந்திய மருத்துவ சங்க தலைவர் டாக்டர் சரவணன் செயலாளர் சிவசைலம், தூத்துக்குடி அரசு மருத்துவமனை உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெபமணி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மரங்களை நட்டனர். 20-க்கும் மேற்பட்ட மரங்கள் நடப்பட்டன. இந்நிகழ்ச்சியில் டாக்டர்கள் தனுஷ்கோடி, கைலாசம், நவீன், முத்தழகு, மற்றும் டிரஸ்ட் உறுப்பினர்கள் கேசவன், செந்தில், கோவிந்தன், பிரபாகர், ஆசீர்வாதம், ஐயப்பன், ரகுபதி, அருள், நாராயணன், ஆனந்தராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education


Arputham Hospital







Thoothukudi Business Directory