» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வாலிபரை தாக்கியதாக நண்பர்கள் 2பேர் கைது!
ஞாயிறு 9, பிப்ரவரி 2025 11:55:47 AM (IST)
தூத்துக்குடியில் மது குடிக்கும்போது ஏற்பட்ட தகராறில் வாலிபரை தாக்கிய அவரது நண்பர்கள் 2பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி இந்திரா நகரை சேர்ந்தவர் ஆல்வின் மகன் அச்சுதன் (20), இவர் தனது நண்பர்கள் காமநாயக்கன்பட்டி மகிமை நகரை சேர்ந்த ராஜசேகரன் மகன் வரதராஜன் (27), தூத்துக்குடி திருவிக நகரை சேர்ந்த கருப்பசாமி மகன் கார்த்திக் (37) மற்றும் ஒருவருடன் பாளை., ரோடு ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள பாலத்தின் கீழே அமர்ந்து மதுபானம் அருந்தினர்களாம்.
அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. அச்சுதனை 3பேரும் சேர்ந்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து அவர் அளித்த புகாரின் பேரில், புதுக்கோட்டை சப் இன்ஸ்பெக்டர் மாணிக்கராஜா வழக்குப் பதிந்து வரதராஜ், கார்த்திக் ஆகிய 2பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










