» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கணினி பட்டா கேட்டு மனு அளித்த மக்களுக்கு விரைவில் பட்டா வழங்கப்படும் : அமைச்சர் கீதா ஜீவன் உறுதி
ஞாயிறு 9, பிப்ரவரி 2025 10:58:44 AM (IST)

தூத்துக்குடியில் கணினி பட்டா கேட்டு மனு அளித்த பொது மக்களுக்கு விரைவில் பட்டா வழங்கப்படும் என அமைச்சர் கீதா ஜீவன் வாக்குறுதி அளித்தார்.
தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் கிரைய பத்திரம் வைத்திருந்து வீட்டு உரிமையாளர் பெயரில் கணினி பட்டா பெறாமல் வீடு வைத்திருப்பவர்களுக்கு மற்றும் தமிழ்நாடு அரசால் பட்டா வழங்கப்பட்டு பெயர் மாற்றம் செய்யாமல் இருப்பவர்களுக்கு கணினி பட்டா பெறுவதற்கான சிறப்பு முகாம் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் ஏற்பாட்டில் தூத்துக்குடி சட்டமன்ற அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
இதில் மீளவிட்டான், சங்கரப்பேரி, முத்தம்மாள் காலனி, ஸ்டேட் பேங்க் காலனி, கிருஷ்ணராஜபுரம், உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கணினி பட்டா கேட்டு அமைச்சர் கீதா ஜீவனிடம் மனு அளித்தனர். பொதுமக்கள் பட்டா கேட்டு வழங்கிய மனுவை அதிகாரிகள் பரிசீலனை செய்து உடனடியாக கணினி பட்டா வழங்கப்படும் என அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார்.
தாங்கள் நீண்ட நாட்களாக தாலுகா அலுவலகம், மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்துள்ளோம் ஆனால் தாங்கள் பட்டா எப்படி வாங்குவது என தெரியாமல் மிகவும் அவதிப்பட்டு வந்தோம். இன்று நடைபெற்ற சிறப்பு முகாமில் அமைச்சர் கீதா ஜீவனிடம் கணணி பட்டா கேட்டு மனு அளித்தோம் உடனடியாக தங்களுக்கு கணணி பட்டா வழங்கப்படும் என அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்ததற்கு பொதுமக்கள் மனதார நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி தாசில்தார் முரளிதரன், திமுக மாநகர செயலாளர் எஸ்ஆர் ஆனந்த சேகரன், பகுதி செயலாளர் ரவீந்திரன், வழக்கறிஞர் நாகராஜ், நேர்முக உதவியாளர் ஆல்பர்ட் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)











VijayakumarFeb 9, 2025 - 07:05:56 PM | Posted IP 162.1*****