» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தருவைக்குளம் புனித நிக்கொலாசியார் ஆலயத் திருவிழா : திரளான மக்கள் பங்கேற்பு

ஞாயிறு 9, பிப்ரவரி 2025 9:30:29 AM (IST)



தருவைக்குளம் புதுமை வள்ளல் புனித நிக்கொலாசியார் ஆலயத் திருவிழாவில் இன்று காலைஆடம்பர பெருவிழா திருப்பலி நடைபெற்றது.

தூத்துக்குடி மறைமாவட்டம் தருவைகுளம் புதுமை வள்ளல் புனித நிக்கொலாசியார் ஆலயத்தின் 119ஆம் ஆண்டு திருத்தல பெருவிழா ஜன.31ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் 9ஆம் திருவிழா ஆடம்பர மாலை ஆராதனை பெருவிழா நேற்று மாலையில் பேரருட்தந்தை பன்னீர் செல்வம் தலைமையில் நடைபெற்றது. புதியபுத்தூர் பங்குதந்தை சந்தீஸ்டன் முன்னிலை வகித்தார். 

மறைமாவட்ட முதன்மைச் செயலர் அந்தோணி ஜெகதீசன் மறையுரையாற்றினார். விழாவில் இன்று (ஞாயிறு) காலை ஆடம்பர பெருவிழா திருப்பலி மறைமாவட்ட முன்னாள் ஆயர் இவோன் அம்புரோஸ் தலைமையில் நடைபெற்றது. திருவிழா ஆராதனையில் திரளான இறைமக்கள் கலந்துகொண்டனர் திருவிழாவிற்கான ஏற்பாடுகளை பங்குதந்தை வின்சென்ட் தலைமையில் ஊர் கட்டளைக்காரா்கள் மற்றும் இறைமக்கள் செய்திருந்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education



Arputham Hospital






Thoothukudi Business Directory