» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தருவைக்குளம் புனித நிக்கொலாசியார் ஆலயத் திருவிழா : திரளான மக்கள் பங்கேற்பு
ஞாயிறு 9, பிப்ரவரி 2025 9:30:29 AM (IST)

தருவைக்குளம் புதுமை வள்ளல் புனித நிக்கொலாசியார் ஆலயத் திருவிழாவில் இன்று காலைஆடம்பர பெருவிழா திருப்பலி நடைபெற்றது.
தூத்துக்குடி மறைமாவட்டம் தருவைகுளம் புதுமை வள்ளல் புனித நிக்கொலாசியார் ஆலயத்தின் 119ஆம் ஆண்டு திருத்தல பெருவிழா ஜன.31ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் 9ஆம் திருவிழா ஆடம்பர மாலை ஆராதனை பெருவிழா நேற்று மாலையில் பேரருட்தந்தை பன்னீர் செல்வம் தலைமையில் நடைபெற்றது. புதியபுத்தூர் பங்குதந்தை சந்தீஸ்டன் முன்னிலை வகித்தார்.
மறைமாவட்ட முதன்மைச் செயலர் அந்தோணி ஜெகதீசன் மறையுரையாற்றினார். விழாவில் இன்று (ஞாயிறு) காலை ஆடம்பர பெருவிழா திருப்பலி மறைமாவட்ட முன்னாள் ஆயர் இவோன் அம்புரோஸ் தலைமையில் நடைபெற்றது. திருவிழா ஆராதனையில் திரளான இறைமக்கள் கலந்துகொண்டனர் திருவிழாவிற்கான ஏற்பாடுகளை பங்குதந்தை வின்சென்ட் தலைமையில் ஊர் கட்டளைக்காரா்கள் மற்றும் இறைமக்கள் செய்திருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










