» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்காமல் மத்திய அரசு தவறான கணக்கு போடுகிறது : அமைச்சர் கீதா ஜீவன்பேச்சு

ஞாயிறு 9, பிப்ரவரி 2025 9:17:31 AM (IST)



மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்காத மத்திய அரசைக் கண்டித்து விளாத்திகுளத்தில் திமுக சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில்  வடக்கு மாவட்ட திமுக சார்பில் நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டுக்கு அநீதி இழைத்த ஒன்றிய பாஜக அரசை கண்டித்து மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. பொதுக்கூட்டத்தில் வடக்கு மாவட்ட செயலாளர் அமைச்சர் கீதா ஜீவன் தலைமையேற்று  பேசுகையில், "பட்ஜெட்டில் ஒரு ரூபாய் கூட தமிழ்நாட்டுக்கு ஒதுக்கீடு செய்யவில்லை. பேருக்கு ஒரே ஒரு திருக்குறளை மட்டும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருக்கிறார். 

தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்கீடு செய்யாமல் இருந்தால் மக்கள் நம்மளை ஏற்றுக் கொள்வார்கள் என்று மத்திய அரசு தவறான கணக்கு போட வேண்டாம். மத்திய அரசு அறிவித்த மெட்ரோ திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. 100 நாள் வேலை மற்றும் ஏழை எளிய மக்களுக்கு எந்தவிதமான திட்டமும் ஒதுக்கீடு செய்யவில்லை.

ஆனால் மத்திய அரசு பொருளாதார அறிக்கையிலும் நிதி அயோக் அறிக்கையிலும் தமிழ்நாடு வளர்ச்சி அடைந்துள்ளது என்று கூறுகிறார்களே தவிர எந்தவிதமான நிதி ஒதுக்கீடும் செய்யவில்லை. 2015 ல்  எய்ம்ஸ் அடிக்கல் நாட்டுனாங்க அதுக்கும் எந்த விதமான நிதி ஒதுக்கீடும் செய்யவில்லை. ஆனால் அம்பானி கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு 25 லட்சம் கோடி கடனை தள்ளுபடி பண்ணின மத்திய அரசு தமிழ்நாட்டில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு கல்வி கடனை ரத்து செய்யவில்லை. தமிழ்நாட்டில் நல்லா செயல்பட்டுக்கிட்டு இருக்கிற SSI திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்யல என்றும் பேசினார்.

இந்நிகழ்வில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் முன்னிலை வகித்தார். விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு வரவேற்புரை ஆற்றினார், தலைமை கழக பேச்சாளர்கள் ஆரூர் மணிவண்ணன், திருப்பூர் கூத்தரசன், மாநில நெசவாளர் அணி துணை செயலாளர் வசந்தம் ஜெயக்குமார், மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகரச் செயலாளர் ஆனந்த சேகரன், ஒன்றிய செயலாளர்கள் ராதாகிருஷ்ணன், செல்வராஜ், மும்மூர்த்தி, மாரிமுத்து, ராமசுப்பு, அன்பு ராஜன், நவநீதக்கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். விளாத்திகுளம் பேரூர் கழக செயலாளர் வேலுச்சாமி நன்றியுரை ஆற்றினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads






CSC Computer Education

Arputham Hospital



Thoothukudi Business Directory