» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

டெல்லியில் 27 ஆண்டுகளுக்கு பிறகு பாஜக ஆட்சி: நாசரேத்தில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்!

சனி 8, பிப்ரவரி 2025 8:20:23 PM (IST)



டெல்லி சட்டசபை தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதை வரவேற்று நாசரேத்தில் பாஜகவினர் பட்டாசு வெடித்து பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர் 

டெல்லி சட்டசபை தேர்தலில் பாஜக வெற்றிப் பெற்று, 27 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சி அமைக்க உள்ளது. இந்தநிலையில் நாசரேத் நகரத்தில் கே.வி.கே சாமி சிலை அருகே பாரதிய ஜனதா கட்சியினர் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு  இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். 

நிகழ்ச்சிக்கு நாசரேத் நகர தலைவர் பார்தசாரதி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் கனல் ஆறுமுகம்  முன்னிலை வகித்தார். இதில் கிளைத்தலைவர்கள்  ராமதாஸ்,  வசந்த்,  பட்டுராஜன், ரத்தினம், ராஜகோபால், ஒன்றிய தமிழ் வளர்ச்சி பிரிவு தலைவர் முருகப்பா மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதுபோல் தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பாஜகவினர் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


CSC Computer Education





Arputham Hospital



Thoothukudi Business Directory