» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி கல்லூரியில் அதிக கட்டணம் வசூல்: இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்!

சனி 8, பிப்ரவரி 2025 7:53:46 PM (IST)



தூத்துக்குடி கல்லூரியில் அதிக கட்டணம் வசூலிப்பதைக் கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
 
தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் கல்வி கட்டணத்திற்கு எதிராக போராடிய மாணவர் சங்கத் தலைவர் நேசமணியை நிரந்தர நீக்கம் செய்த கல்லூரி நிர்வாகத்தை கண்டித்தும், நிரந்தர நீக்கத்தை ரத்து செய்து மீண்டும் கல்லூரிக்குள் சேர்த்திட வேண்டும். தமிழக அரசே கல்லூரியை ஏற்று நடத்திட வேண்டும். அரசு நிர்ணயித்த கல்வி கட்டணத்தை அமலாக்க வேண்டும் என வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் தூத்துக்குடி சிதம்பர நகர் 2வது தெரு கடை விதியில் வைத்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட பொருளாளர் மனோஜ் தலைமை வகித்தார். மாவட்டத் துணைத் தலைவர் ஜேம்ஸ் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் இ.சுரேஷ் நிறைவு செய்து பேசினார். இதில் மாவட்ட செயலாளர் கிஷோர் குமார், மாவட்ட குழு உறுப்பினர்கள் பாலமுருகன், ஸ்ரீநாத், சுடலைமணி, ஜான்சன், மாநகரக் குழு நிர்வாகிகள் மணிகண்டன், சங்கர பாண்டி, புறநகர குழு நிர்வாகிகள் கருப்பசாமி, தங்கராஜ், முனீஷ், அபி, விஸ்வன், கனிஷ், தெய்வநாயகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads






Arputham Hospital

CSC Computer Education



Thoothukudi Business Directory