» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வெள்ளூர் கருப்பசாமி கோவில் வருஷாபிஷேக விழா!

சனி 8, பிப்ரவரி 2025 5:23:09 PM (IST)



ஸ்ரீவைகுண்டம் அருகே வெள்ளூர் அருள்மிகு இடையர் ஸ்ரீ கருப்பசாமி கோவில் வருஷாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே வெள்ளூர் அருள்மிகு இடையர் ஸ்ரீ கருப்பசாமி கோவில் வருஷாபிஷேக விழாவை முன்னிட்டு காலை 7 மணிக்கு மேல் விக்னேஸ்வர பூஜை, புண்ணிய வாசனம் வேத பூஜை உடன் சிறப்பு வேள்வி பூஜையில் மகாபூரனாதி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து திருக்கும்பம் எழுந்திருத்தல், பிரதான மூர்த்திகளுக்கு அபிஷேகம் நடைபெற்றது. 

பிற்பகல் 12:30 மணிக்கு அலங்கார மகா தீபாரதனை நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. வருகின்ற 11ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணி முதல் 12 மணிக்குள் கருப்பசாமி கோவில் கொடை விழாவிற்கான கால் நாட்டு விழா நிகழ்ச்சி நடைபெற உள்ளது. 18ஆம் தேதி கருப்பசாமி கோவில் கொடை விழா நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளைகோவில் விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


CSC Computer Education



Arputham Hospital





Thoothukudi Business Directory