» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் விபத்தில் முன்னாள் கவுன்சிலர் பலி
சனி 8, பிப்ரவரி 2025 12:01:33 PM (IST)
தூத்துக்குடியில் சாலை விபத்தில் காயம் அடைந்த முன்னாள் கவுன்சிலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தூத்துக்குடி ஜார்ஜ் ரோடு, கணேசபுரத்தை சேர்ந்தவர் துரைராஜ் மகன் ஜெயக்குமார் (65), இவர் 36 வது வார்டு முன்னாள் அதிமுக நகராட்சி கவுன்சிலர் ஆவார். கடந்த 4ம் தேதி சைக்கிளில் தூத்துக்குடி ஜார்ஜ் ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது அவ்வழியே வந்த பைக் மோதியது. இவ்விபத்தில் ஜெயக்குமார் பலத்த காயம் அடைந்த அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து தென்பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
அவரது மறைவுக்கு அதிமுகவினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.இவரது மகன் தனராஜ், மாநகராட்சி முன்னாள் கவுன்சிலர் ஆவார். மேலும் தெற்கு மாவட்ட அதிமுக இளைஞர், இளம்பெண்கள் பாசறை செயலளாரக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










