» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் விபத்தில் முன்னாள் கவுன்சிலர் பலி

சனி 8, பிப்ரவரி 2025 12:01:33 PM (IST)

தூத்துக்குடியில் சாலை விபத்தில் காயம் அடைந்த முன்னாள் கவுன்சிலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  

தூத்துக்குடி ஜார்ஜ் ரோடு, கணேசபுரத்தை சேர்ந்தவர் துரைராஜ் மகன் ஜெயக்குமார் (65), இவர் 36 வது வார்டு முன்னாள் அதிமுக நகராட்சி கவுன்சிலர் ஆவார். கடந்த 4ம் தேதி சைக்கிளில் தூத்துக்குடி ஜார்ஜ் ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது அவ்வழியே வந்த பைக் மோதியது. 

இவ்விபத்தில் ஜெயக்குமார் பலத்த காயம் அடைந்த அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து தென்பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

அவரது மறைவுக்கு அதிமுகவினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.இவரது மகன் தனராஜ், மாநகராட்சி முன்னாள் கவுன்சிலர் ஆவார். மேலும் தெற்கு மாவட்ட அதிமுக இளைஞர், இளம்பெண்கள் பாசறை செயலளாரக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital




CSC Computer Education





Thoothukudi Business Directory