» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

காமநாயக்கன்பட்டியில் இலவச கண் சிகிச்சை முகாம்

வெள்ளி 7, பிப்ரவரி 2025 4:53:02 PM (IST)



காமநாயக்கன்பட்டியில் இலவச கண் சிகிச்சை முகாமினை திருத்தல பேராலய பேராயர் அந்தோணி குரூஸ் தொடங்கி வைத்தார். 

தூத்துக்குடி மாவட்டம் காமநாயக்கன்பட்டியில் கோவில்பட்டி எஸ்.எஸ் துரைசாமி நாடார் மாரியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நல பணி திட்ட முகாமில் விருதுநகர் ரோட்டரி சங்கம்.சங்கரா கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது. கண் பரிசோதனை முகாமினை காமநாயக்கன்பட்டி திருத்தல பேராலய பேராயர் அந்தோணி குரூஸ் தொடங்கி வைத்தார். 

கண் மருத்துவர் தரணி தங்கராஜ் தலைமையிலான மருத்துவ குழுவினர் 100க்கும் மேற்பட்டோருக்கு கண் பரிசோதனை செய்தனர். இதில் ரோட்டரி மாவட்ட முன்னாள் துணை ஆளுநர் வடிவேல் ராமையா, சொர்ணா நர்சிங் கல்லூரி தாளாளர் ஜெபின்ஜோஸ், புனித அலோசியஸ் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆரோக்கியராஜ்,பேராசிரியர்கள் விஜய கோபாலன், கற்குவேல், ஜெயசிங் ராஜ்,சொர்ணா நர்சிங் கல்லூரி ஆசிரியை ரின்ஸிமோல், உள்பட நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் மரம் நடும் பசுமை விழா

வெள்ளி 19, டிசம்பர் 2025 12:49:02 PM (IST)

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



CSC Computer Education


Arputham Hospital





Thoothukudi Business Directory