» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஆலந்தலை திரு இருதய அற்புத கெபி திருத்தலத்தில் சிறப்பு திருப்பலி

வெள்ளி 7, பிப்ரவரி 2025 4:43:33 PM (IST)


ஆலந்தலை இயேசுவின் திரு இருதய அற்புத கெபி திருத்தலத்தில் முதல் வெள்ளி சிறப்பு திருப்பலி குழித்துறை மறை மாவட்ட ஆயர் ஆல்பர்ட் அனஸ் தாஸ் தலைமையில் நடந்தது. 

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அடுத்த ஆலந்தலை இயேசுவின் திரு இருதய அற்புத கெபி திருத்தலம் உள்ளது. இந்த திருத்தலத்தில் பிப்ரவரி மாத முதல் வெள்ளியான இன்று சிறப்பு திருப்பலி குழித்துறை மறை மாவட்ட ஆயர் ஆல்பர்ட் அனஸ்தாஸ் தலைமையில் நடைபெற்றது. இதில் விமர்சனங்களை எதிர்கொள்ள வரம் நல்கும் இயேசுவின் திரு இருதயமே என்ற தலைப்பில் சிறப்பு நற்செய்தியை வழங்கினார். 

இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். முன்னதாக சிறப்பு அழைப்பளர் குழித்துறை ஆயர் ஆல்பர்ட் அனஸ்தாஸ், திருத்தல நிதி குழுவினர் சார்பில் பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டார். பின்னர் திருப்பலியில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதான வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை திருத்தல அதிபர் சில்வெஸ்டர், உதவி பங்குத்தந்தை ஜோதிமணி மற்றும் திருத்தல நிதி குழுவினர் செய்திருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் மரம் நடும் பசுமை விழா

வெள்ளி 19, டிசம்பர் 2025 12:49:02 PM (IST)

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


CSC Computer Education




Arputham Hospital




Thoothukudi Business Directory