» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சுயதொழில் தொடங்கிட ரூ.1 கோடி கடனுதவி : முன்னாள் ராணுவ வீரர்களுக்கு ஆட்சியர் அழைப்பு
வெள்ளி 7, பிப்ரவரி 2025 4:10:06 PM (IST)
முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தின் கீழ் முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவரைச் சார்ந்தோர்களுக்கு ரூ.1 கோடி கடனுதவிக்கு விண்ணப்பித்திட ஏதுவாக கூட்டம் மற்றும் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் வெளியிட்ட செய்திக்குறிப்பில், சுயதொழில் தொடங்கிட முதல்வரின் காக்கும் கரங்கள் என்ற புதிய திட்டத்தின்கீழ் முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவரைச் சார்ந்தோர்களுக்கு படைப்பணியின் போது உயிர் நீத்த படைவீரர்களின் கைம்பெண்கள் சுயதொழில் தொடங்குவதற்கு வங்கிகடன் உதவியும் விண்ணப்பித்திட ஏதுவாக விழிப்புணர்வு முகாமும் 14.02.2025 அன்று காலை 10.00 மணிக்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் 55 வயதிற்குட்பட்ட முன்னாள் படைவீரர்கள் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவரைச் சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறவுள்ளது. எனவே இச்சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவரைச் சார்ந்தோர்கள் கலந்து கொண்டு தங்கள் மனுக்களை இரட்டை பரிதிகளில் அடையாள அட்டை நகலுடன் சமர்ப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொள்கிறார்கள்.
மேலும் விவரங்களுக்கு "தூத்துக்குடி முன்னாள் படைவீரர் நலன் உதவி இயக்குநரை நேரில் தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் 1,62,527 வாக்காளர்கள் நீக்கம் : வரைவு வாக்காளர்கள் பட்டியல் வெளியீடு!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:00:19 PM (IST)

தூத்துக்குடியில் மரம் நடும் பசுமை விழா
வெள்ளி 19, டிசம்பர் 2025 12:49:02 PM (IST)










