» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி மாவட்டத்தில் 20 கிராம ஊராட்சிகளில் சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம்
வெள்ளி 7, பிப்ரவரி 2025 3:39:29 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் 20 கிராம ஊராட்சிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்,பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் தொடர்பான சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.
தமிழ்நாடு சமூக தணிக்கை சங்கத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள ஊராட்சிகளில் 23 கட்டங்களாக சமூக தணிக்கை நடைபெற்று வருகிறது. இதில் 20வது கட்டமாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆழ்வார்திருநகரி, ஸ்ரீவைகுண்டம், புதூர், தூத்துக்குடி, ஓட்டப்பிடாரம், சாத்தான்குளம். ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 20 கிராம ஊராட்சிகளில் பிப்.3ம் தேதி முதல் 7ம் தேதி வரை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் கிராம வள பயிற்றுநர்களால் சமூகத் தணிக்கை மேற்கொள்ளப்பட்டு அதற்கான சமூகத் தணிக்கை அறிக்கை சிறப்பு கிராம சபை கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டது.
ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றியம்,கோவங்காடுகிராம ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்திற்கு கூட்டத் தலைவர் சரஸ்வதி தலைமை வகித்தார்.மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அரிகரன் முன்னிலை வகித்தார்.ஊராட்சி செயலர் கணேசன் அனைவரையும் வரவேற்றார். கூட்டத்தினை சமூகத் தணிக்கை வட்டார வள பயிற்றுனர் முத்து முருகன் வழிநடத்தி சமூக தணிக்கை அறிக்கை தொடர்பாக மக்களுடன் கலந்துரையாடல் செய்தார்.
கூட்டத்தில் சமூகத் தணிக்கை அறிக்கை குறித்த 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் கிராம வள பயிற்றுநர்கள் சீதா,சங்கரி, முருகேஸ்வரி, ஜெய செல்வி ஜூலியட் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆனந்த முருகன் நன்றி கூறினார். இதேபோல் ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றியத்தில் மஞ்சள்நீர் காயல், கொற்கை, உமரிக் காடு, திருப்பணி செட்டிகுளம், சூழ வாய்க்கால் உள்பட தூத்துக்குடி மாவட்டத்தில் 20 ஊராட்சிகளில் சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் 1,62,527 வாக்காளர்கள் நீக்கம் : வரைவு வாக்காளர்கள் பட்டியல் வெளியீடு!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:00:19 PM (IST)

தூத்துக்குடியில் மரம் நடும் பசுமை விழா
வெள்ளி 19, டிசம்பர் 2025 12:49:02 PM (IST)











RameshFeb 8, 2025 - 12:29:03 PM | Posted IP 162.1*****