» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் காரப்பேட்டை நாடார் ஆண்கள் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

செவ்வாய் 7, ஜனவரி 2025 5:09:28 PM (IST)



தூத்துக்குடியில் காரப்பேட்டை நாடார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் - ஆசிரியர்கள் சந்திப்பு நிகழ்வு நடைபெற்றது.

காரப்பேட்டை நாடார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 1996 ஆம் ஆண்டு ப்ளஸ் 2 படித்த மாணவர்கள் தங்களுக்கு கல்வி கற்றுக் கொடுத்த ஆசிரியர்களுக்கு பரிசு கொடுத்து ஆசீர் பெற்றனர். தொடர்ந்து தாங்கள் படிக்கும் போது நடைபெற்ற நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டார்கள் தொடர்ந்து ஆசிரியர் ஒருவருக்கு நிகழ்வு நடைபெறும் நாளில் பிறந்த நாள் என்பதால் கேக் வெட்டி வாழ்த்து சொல்லி மகிழ்ந்தார்கள்.

தாங்கள் படித்த பள்ளியின் நூலகத்திற்கு புத்தகங்கள் வழங்கி அசத்தினார்கள். ஆசிரியர்கள் மாணவர்கள் அனைவரும் குரூப் புகைப்படம் எடுத்துக்கொண்டார்கள். முன்னாள் மாணவர்கள் அனைவரும் ஒரே மாதிரி சட்டையில் காரப்பேட்டை நாடார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 1996 பாட்ஜ் ரீயூனியன் என்று எழுதப்பட்டிருந்தது. நிறைவாக அனைவருக்கும் தலைவாழை இலை போட்டு விருந்து வைத்து அசத்தினர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



CSC Computer Education

Arputham Hospital






Thoothukudi Business Directory