» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் வௌிமாநில லாட்டரி சீட்டு விற்றவர் கைது: மொபட், செல்போன் பறிமுதல்

செவ்வாய் 7, ஜனவரி 2025 8:41:11 AM (IST)

தூத்துக்குடியில் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டு விற்றவரை போலீசார் கைது செய்தனர். லாட்டரி விற்பனைக்கு பயன்படுத்திய மொபட், செல்போனை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் போதை பொருள் புழக்கத்தை தடுக்க எஸ்பி  ஆல்பர்ட் ஜான் உத்தரவின் பேரில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி போதை பொருள் தடுப்பு சிறப்பு தனிப்படை அமைத்து போலீசார் கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் தலைமையிலான போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். 

அப்போது அமுதாநகர் பகுதியில் பரமசிவன் (42) என்பவர், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டு இருந்துள்ளார். உடனடியாக தனிப்படை போலீசார் பரமசிவனை மடக்கிபிடித்தனர். அவரிடம் இருந்து 370 லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்த போலீசார், இந்த விற்பனைக்கு பயன்படுத்திய ஒரு செல்போன், ஒரு மொபட் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். 

பின்னர், பரமசிவன், மற்றும் லாட்டரி சீட்டுகள் உள்ளிட்ட பொருட்களை தென்பாகம் போலீசில் தனிப்படையினர் ஒப்படைத்தனர். இதுகுறித்து தென்பாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital


CSC Computer Education







Thoothukudi Business Directory