» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடிகர் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம்
செவ்வாய் 7, ஜனவரி 2025 8:38:34 AM (IST)
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடிகர் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம் செய்தார்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடிகர் சிவகார்த்திகேயன் நேற்று காலையில் சாமி தரிசனம் செய்தார். மூலவர், சண்முகர், வள்ளி, தெய்வானை, தட்சணாமூர்த்தி, பெருமாள் உள்ளிட்ட அனைத்து சன்னதிகளுக்கும் சென்று வழிபட்டார். பின்னர் கோவிலில் இருந்து வெளியே வந்த நடிகர் சிவகார்த்திகேயன் நிருபர்களிடம் கூறியதாவது: முருகபெருமானின் அறுபடை வீடுகளில் சாமி தரிசனம் செய்ய வேண்டும் என்று நீண்ட நாட்களாக நினைத்து கொண்டிருந்தேன். கடந்த மாதம் மழை வெள்ளத்தால் வர முடியவில்லை. தற்போது திருச்செந்தூரில் சாமி தரிசனம் செய்துள்ளேன். மற்ற கோவில்களுக்கும் சென்று வழிபட உள்ளேன். நான் நடித்த அமரன் படத்தை வெற்றி அடையச் செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் சம்பவம் குறித்து கேட்கிறீர்கள், அதுபோன்ற சம்பவம் இனி நிகழக்கூடாது. போலீசார் சரியான நடவடிக்கை எடுத்துள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவிக்கு ஆதரவாக நாம் இருக்க வேண்டும். பெண்கள் தைரியத்துடன் இருக்க வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் இனியும் நிகழக்கூடாது என்று கடவுளிடம் வேண்டுவோம், நானும் வேண்டிக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி நகர போக்குவரத்து பிரிவு காவல் அலுவலகத்தில் எஸ்பி ஆய்வு!
திங்கள் 15, டிசம்பர் 2025 9:18:01 PM (IST)

ஆயுதம் வைத்திருந்தவர்களை மடக்கி பிடித்து கைது செய்த போலீசாருக்கு எஸ்பி பாராட்டு!
திங்கள் 15, டிசம்பர் 2025 9:11:37 PM (IST)

கொலை வழக்கில் 2பேருக்கு ஆயுள் தண்டனை : தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு
திங்கள் 15, டிசம்பர் 2025 8:40:47 PM (IST)

போலி பங்குச்சந்தை முதலீடு தொடர்பான மோசடி : தூத்துக்குடி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை!
திங்கள் 15, டிசம்பர் 2025 8:35:00 PM (IST)

பாஜக சார்பில் சிறப்பு தீவிர திருத்தம் பயிலரங்கம்
திங்கள் 15, டிசம்பர் 2025 8:32:31 PM (IST)

தூத்துக்குடி மாநகர் பகுதிகளில் 17ஆம் தேதி குடிநீர் விநியோகம் இருக்காது!
திங்கள் 15, டிசம்பர் 2025 5:40:10 PM (IST)










