» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம்: 18 தீர்மானங்கள் நிறைவேற்றம்

வெள்ளி 20, டிசம்பர் 2024 3:54:53 PM (IST)



தூத்துக்குடி மாவட்டத்தில் கச்சேரி தளவாய்புரம் உட்பட 20 ஊராட்சிகளில் சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.

தமிழ்நாடு சமூக தணிக்கை சங்கத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள ஊராட்சிகளில் 23 கட்டங்களாக சமூக தணிக்கை நடைபெற்று வருகிறது. இதில் 14வது கட்டமாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 12 ஊராட்சி ஒன்றியத்தில் 20 கிராம ஊராட்சிகளில் டிச 16ம் தேதி முதல் 20ம் தேதி வரை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம்,பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் கிராம வள பயிற்றுநர்களால் சமூகத் தணிக்கை மேற்கொள்ளப்பட்டு அதற்கான சமூகத் தணிக்கை அறிக்கை சிறப்பு கிராம சபை கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம். ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம், கச்சேரி தளவாய்புரம் கிராம ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்திற்கு கூட்டத் தலைவர் மரிய நட்சத்திரா தலைமை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் சேர்ம பொன் செல்வி ஒன்றிய உதவி பொறியாளர் பத்மாவதி,ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலர் சிவபெருமாள் அனைவரையும் வரவேற்றார்.

கூட்டத்தினை ஓட்டப்பிடாரம் சமூகத் தணிக்கை வட்டார வள பயிற்றுனர் முத்து முருகன் வழிநடத்தி சமூக தணிக்கை அறிக்கை தொடர்பாக மக்களுடன் கலந்துரையாடல் செய்தார். இதில் வேலை அட்டை புதுப்பித்து தர வேண்டி மனு அளித்த காசியம்மாளுக்கு உதவி பொறியாளர் பத்மாவதி புதிய வேலை அட்டை வழங்கினார். கூட்டத்தில் சமூகத் தணிக்கை அறிக்கை குறித்த 18 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இதில் கிராம வள பயிற்றுநர்கள் முத்துமாரி, விசாலாட்சி, ஆனந்தி, முத்துலட்சுமி, வார்டு உறுப்பினர்கள் பணித்தள பொறுப்பாளர்கள் வேல் தாய், முகுந்தனா. உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பணித்தள பொறுப்பாளர் சுதா நன்றி கூறினார். இதேபோல் ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்தில் வெள்ளாரம், ஒட்ட நத்தம்,உள்பட தூத்துக்குடி மாவட்டத்தில் 20 ஊராட்சிகளில் சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.


மக்கள் கருத்து

m.sundaramDec 20, 2024 - 08:36:30 PM | Posted IP 172.7*****

These special Grama Sabha is being held as per the direction of Govt. It is to be done by the VP itself without any external pressure. Social audit is being conducted as a ritual as stated by the previous Chief Sectary of Govt of TN in his book Sadanku. Most of the so called trained social auditors are having no basic knowledge of social audit of MGNREGS. The govt is making the people fool.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital

CSC Computer Education






Thoothukudi Business Directory