» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம்
ஞாயிறு 3, நவம்பர் 2024 9:10:41 PM (IST)

தூத்துக்குடியில் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
தூத்துக்குடியை தலைமை இடமாக கொண்டு இயங்கி வரும் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் 103வது நிறுவனர் தின விழாவை முன்னிட்டு வங்கியின் மட்டக்கடை கிளை, மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் வடக்கூர் பேட்டரி சர்ச் வளாகத்தில் உள்ள பிரைமரி மற்றும் நர்சரி பள்ளியில் நடைபெற்றது.
முகாமுக்கு தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி தூத்துக்குடி மண்டல மேலாளர் கௌதமன் தலைமை தாங்கினார். முகாமை பேட் ரிக் சர்ச் குருவானவர் செல்வின் துறை ஜெபம் செய்து துவக்கி வைத்தார். இந்த முகாமில 300க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டு, இலவசமாக கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டன.
மேலும் கண் புரை உள்ளவர்கள் இலவசமாக கண் ஆபரேஷன் செய்வதற்கு அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். முகாம் ஏற்பாடுகளை தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி மட்டக்கடை கிளை மேலாளர் சுரேஷ் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மாநகர் பகுதிகளில் 17ஆம் தேதி குடிநீர் விநியோகம் இருக்காது!
திங்கள் 15, டிசம்பர் 2025 5:40:10 PM (IST)

டிச.19ல் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் : மாவட்ட வருவாய் அலுவலர் தகவல்!
திங்கள் 15, டிசம்பர் 2025 5:24:42 PM (IST)

கார்த்திகை 5வது சோம வாரம்: தூத்துக்குடி சிவன் கோவிலில் 1008 சங்காபிஷேகம்
திங்கள் 15, டிசம்பர் 2025 5:06:23 PM (IST)

தூத்துக்குடியில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு!
திங்கள் 15, டிசம்பர் 2025 4:04:38 PM (IST)

தூத்துக்குடியில் மக்கள் குறை களையும் நாள் கூட்டம் : 387 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது
திங்கள் 15, டிசம்பர் 2025 3:43:10 PM (IST)

இந்திய கிரிக்கெட் அணியில் தூத்துக்குடி வீரர்கள் விளையாட வாய்ப்பு: டிஎன்சிஏ செயலர் பேச்சு
திங்கள் 15, டிசம்பர் 2025 3:32:52 PM (IST)











KumarNov 4, 2024 - 07:57:13 AM | Posted IP 172.7*****