» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

குழந்தைகள் பள்ளிக்கூடம் சென்று வர பாதை திறப்பு: ஆட்சியர் நடவடிக்கை!!

செவ்வாய் 25, ஜூன் 2024 3:38:13 PM (IST)



ஓட்டப்பிடாரம் அருகே கீழ வேலாயுதபுரம் கிராமத்திலிருந்து மேல வேலாயுதபுரம் கிராமத்திற்கு குழந்தைகள் பள்ளிக்கூடம் சென்று வரவும், பொதுமக்கள் பயன்பாட்டிற்காகவும் பாதை திறந்துவிடப்பட்டது

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வட்டம், புதூர் பாண்டியாபுரம் கிராமம்  மஜரா மேல வேலாயுதபுரம் கிராமம் புஞ்சை புல எண் 145/3 ல் 0.36.0 ஹெக்டேர் நிலம் மேகலிங்கம் மகன் லிங்கமுத்து என்பவர் பெயரில் உள்ளது. மேற்படி புலத்திலிருந்து கீழ வேலாயுதபுரம் கிராமத்திற்கு விளக்கிப்பாதை கிராம கணக்கில் உள்ளது. மேற்படி பாதை வழியாக கீழ வேலாயுதபுரம் கிராமத்திலிருந்து மேல வேலாயுதபுரம் கிராமத்திற்கு குழந்தைகள் பள்ளிக்கூடம் சென்று வரவும், பொதுமக்கள் பயன்பாட்டிற்காகவும் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்தனர்.

தற்போது மேகலிங்கம் மகன் லிங்கமுத்து என்பவர் பொது பயன்பாட்டிற்காகவும், குழந்தைகள் பள்ளி சென்று வர பயன்படுத்தி வந்த மேற்படி விளக்கி பாதையினை அடைத்து வைத்ததாகவும், அதனால் பள்ளி குழந்தைகள் பள்ளிக்கூடம் செல்லாமல் இருப்பதாகவும் வந்த தகவலை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி,  அறிவுறுத்தலின்பேரில், வருவாய் துறையினர் மற்றும் காவல் துறையினர் மேற்படி இடத்தினை பார்வையிட்டும், மேற்படி கீழ வேலாயுதபுரம் கிராம பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் மேற்படி விளக்கிப் பாதையினை திறந்துவிட்டனர். இதையடுத்து தற்போது வழக்கம்போல் குழந்தைகள் அந்த பாதை வழியாக பள்ளிக்கு சென்று வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital






New Shape Tailors



Thoothukudi Business Directory