» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நீர்ப்பாசன சங்க தலைவர் கொலையில் விவசாயி கைது: பரபரப்பு வாக்குமூலம்!

ஞாயிறு 23, ஜூன் 2024 8:08:05 PM (IST)

தூத்துக்குடி அருகே நீர்ப்பாசன சங்க தலைவர் கொலை வழக்கில் போலீசார் விவசாயியை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

தூத்துக்குடி அருகே தருவைகுளத்தை அடுத்த பாலாறுபட்டியை சேர்ந்தவர் சண்முகசுந்தரம் (57). விவசாயி. இவர் கல்மேடு பகுதி நீர்பாசன சங்க தலைவராக இருந்தார். நேற்று அவர் பாலாறு பட்டி அருகே உள்ள கல்மேடு செல்லும் கடற்கரையை ஒட்டிய பாதையில் காயங்களுடன் இறந்து கிடந்தார். தகவல் அறிந்து தருவைகுளம் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தியதில் அவர் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.

இதையடுத்து இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ராஜகுமாரி வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடினார். அப்போது முன்விரோதத்தில் அதே பகுதியை சேர்ந்த விவசாயியான இளையராஜா (47) என்பவர், கம்பால் தாக்கி சண்முக சுந்தரத்தை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

பாலாறுபட்டியையும், பட்டின மருதூரையும் இடையில் ஒரு சாலை மட்டுமே பிரிக்கிறது. இந்த 2 கிராமத்திலும் உள்ள விவசாய நிலங்களிலும் அடிக்கடி 2 தரப்பையும் சேர்ந்தவர்களின் ஆடு, மாடுகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வந்துள்ளது. இதுதொடர்பாக நீர்பாசன சங்க தலைவர் என்ற முறையில் சண்முக சுந்தரம் அடிக்கடி காவல் நிலையத்திற்கு சென்று வந்துள்ளார். விவசாயிகளுடன் சமரசம் பேசுவது போன்ற செயல்களையும் செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் ஆடு, மாடு மேய்ந்த தகராறில் இளையராஜாவுக்கும், சண்முக சுந்தரத்திற்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது. நேற்று முன்தினம் மேய்ச்சலுக்கு சென்ற தனது கன்றுக்குட்டி காணாமல் போனதால் அதனை தேடி சண்முகசுந்தரம் சென்றுள்ளார். அப்போது வழியில் நின்ற இளையராஜா அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதும், ஆத்திரத்தில் கம்பால் தாக்கி கொலை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர் தெரிவித்த தகவல்களை போலீசார் வாக்குமூலமாக பதிவு செய்து கொண்டனர். தொடர்ந்து இளைய ராஜாவை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


New Shape Tailors


Arputham Hospital






Thoothukudi Business Directory