» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை அமல் படுத்த வலியுறுத்தி தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம்!

வியாழன் 20, ஜூன் 2024 12:42:06 PM (IST)



வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி தூத்துக்குடியில் நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை தமிழக அரசு உடனடியாக அமல்படுத்த வலியுறுத்தியும், சென்னை வழக்கறிஞர் கௌதமன் படுகொலை சம்பவத்தை கண்டித்தும் தூத்துக்குடி நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு  வழக்கறிஞர்கள் சங்க தலைவர் தனசேகர் டேவிட் தலைமை வகித்தார். 

இதில், செயலாளர் செல்வின், இணைச் செயலாளர் ஜஸ்டின், செயற்குழு உறுப்பினர்கள் ஸ்ரீநாத் ஆனந்த், தமிழ்செல்வி, கார்த்திகேயன், ரமேஷ் செல்வகுமார், பார் கவுன்சில் உறுப்பினர் மைக்கேல் ஸ்டானிஸ் பிரபு, வழக்கறிஞர்கள் சின்னதம்பி, சுரேஷ்குமார், கார்த்திகேயன், மரிய தாமஸ், ஐயனார், உட்பட 100க்கும் மேற்பட்டார் கலந்து கொண்டனர். 

மேலும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் முடிவின்படி நாளை வெள்ளிக்கிழமை ஒருநாள் மட்டும் வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணிகளை புறக்கணிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



CSC Computer Education

Arputham Hospital




New Shape Tailors



Thoothukudi Business Directory