» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் மரக்கன்றுகள் நடும் பணி: மேயர் துவக்கி வைத்தார்!
வியாழன் 20, ஜூன் 2024 11:19:56 AM (IST)
தூத்துக்குடியில் பைபாஸ் சாலை அருகே மரக்கன்றுகள் நடும் பணியினை மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்தார்.
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பைபாஸ் சாலையின் அருகில் மாநகரை மாசில்லாததாகவும் தூய்மைப்படுத்தும் விதமாகவும் மரக்கன்றுகள் நடும் பணியினை மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்தார். இதில், மாநகர் நல அலுவலர் மருத்துவர் தினேஷ், மாமன்ற உறுப்பினர் இசக்கிராஜா, வட்ட கழக செயலாளர் சுப்பையா, மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.