» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அரிவாளால் தாக்கி கொலை முயற்சி: ரவுடி உட்பட 3 பேர் கைது!

சனி 15, ஜூன் 2024 10:45:59 AM (IST)

செய்துங்கநல்லூர் அருகே தகராறு செய்து அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட ரவுடி உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்ட  காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன்  உத்தரவின்படி ஸ்ரீவைகுண்டம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்  மாயவன் மேற்பார்வையில் செய்துங்கநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர்  ரஷிதா தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டபோது, கருங்குளம் பாலம் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரணை செய்தனர்.

இதில், செய்துங்கநல்லூர் வி.கோவில்பத்து பகுதியைச் சேர்ந்த கொம்பையா என்பவரது மகன்களான கிருஷ்ணமூர்த்தி (21), திருவரங்கசெல்வம் (25) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த சுப்புபாண்டி மகன் திருவரங்கசெல்வம் (21) என்பதும்,  அப்பகுதியில் வந்து கொண்டிருந்த ஒருவரை வழிமறித்து அவரிடம் தகராறு செய்து அவரை அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

உடனே போலீசார் கிருஷ்ணமூர்த்தி, திருவரங்கசெல்வம், மற்றொரு திருவரங்கசெல்வம் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். மேலும் இதுகுறித்து செய்துங்கநல்லூர் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital

CSC Computer Education





Thoothukudi Business Directory