» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஆயுதப்படை காவல்துறையினர் உடற்பயிற்சி : எஸ்பி பாலாஜி சரவணன் ஆய்வு!

சனி 15, ஜூன் 2024 10:41:20 AM (IST)



தூத்துக்குடி நகர உட்கோட்டம் மற்றும் ஆயுதப்படை காவல்துறையினரின் உடற்பயிற்சியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன்  பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி நகர உட்கோட்டம் மற்றும் ஆயுதப்படை போலீசாரின் உடற்பயிற்சி இன்று காலை வடபாகம் காவல் நிலைய வளாக மைதானத்தில் நடைபெற்றது. இப்பயிற்சியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் நேரில் சென்று ஆய்வு செய்து, காவல் துறையினர் மேற்கொள்ள வேண்டிய முக்கிய பணிகள் குறித்தும், உடல் நலத்தை பேணிக்காத்து உடலையும் மனதையும் நன்றாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுரைகள் வழங்கினார். 

பின்னர் போலீசாரின் குறைகளை கேட்டறிந்து அதற்கு நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். இந்நிகழ்வின் போது தூத்துக்குடி நகர கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர்  கேல்கர் சுப்ரமண்ய பால்சந்திரா,  ஆயுதப்படை காவல் ஆய்வாளர் (பொறுப்பு)  பேச்சிமுத்து உட்பட சார்பு ஆய்வாளர்கள், ஆயுதப்படை போலீசார் மற்றும் தூத்துக்குடி நகர உட்கோட்ட போலீசார் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



CSC Computer Education


Arputham Hospital





Thoothukudi Business Directory