» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தொழில் போட்டியில் கொலை மிரட்டல் வாலிபர் கைது!

சனி 15, ஜூன் 2024 9:56:29 AM (IST)

சாத்தான்குளம் அருகே தொழில் போட்டியில் சவுண்ட் சர்வீஸ் உரிமையாளருக்கு கொலைமிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே கட்டாரிமங்கலம் கீழத்தெருவை சேர்ந்தவர் அய்யாக்குட்டி மகன் முனீஸ்வரன்(28). இவர் அதே பகுதியில் ஒலி பெருக்கி வாடகைக்கு விடும் தொழில் நடத்தி வருகிறார். இவரது உறவினரான அதே பகுதியை சேர்ந்த வீரமணி மகன் மாயாண்டி (22) என்பவரும் இதே தொழிலில் ஈடுபட்டு வருகிறார். 

இருவருக்கும் தொழில் போட்டி காரணமாக பிரச்னை ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் முனீஸ்வரன் வீட்டில் இருந்தபோது அங்கு வந்த மாயாண்டி, முனீஸ்வரை அவதூறாக பேசி கொலைமிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து முனீஸ்வரன் அளித்த புகாரின்பேரில் சாத்தான்குளம் சிறப்பு உதவி ஆய்வாளர் முருகேசன் வழக்குபதிவு செய்து மாயாண்டியை கைது செய்தார். உதவி ஆய்வாளர் சுரேஷ்குமார் விசாரணை நடத்தி வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital


CSC Computer Education




Thoothukudi Business Directory