» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
நாட்டுப் படகுகளை மீன்வளத் துறையினர் ஆய்வு
சனி 15, ஜூன் 2024 7:52:25 AM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நாட்டுப் படகுகளை மீன்வளத் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.
தமிழகத்தில் ஆண்டுதோறும் மீன்வளத்துறை சாா்பில் விசைப்படகுகள், நாட்டுப்படகுகள் ஆகியவை கடலில் இயக்குவதற்கு தகுதியானதாக உள்ளதா என ஆய்வு மேற்கொள்வது வழக்கம். அதன்படி கடந்த சில தினங்களுக்கு முன்பு மாவட்டத்தில் உள்ள 551 விசைப்படகுகளை மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அதனைத் தொடா்ந்து, நாட்டுப்படகுகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டன.
தூத்துக்குடி மாவட்டத்தில், வேம்பாா் முதல் பெரியதாழை வரை உள்ள மீனவ கிராமங்களில் சுமாா் 4 ஆயிரம் நாட்டுப்படகுகள் உள்ளன. அதன்படி, தூத்துக்குடி மீன்வளத் துறை இணை இயக்குநா் (பொறுப்பு) காசிநாத பாண்டியன் தலைமையில், உதவி இயக்குநா்கள் விஜயராகவன், புஸ்ரா சப்னம், ராதாபுரம் மீன்வளத்துறை உதவி இயக்குநா் ராஜதுரை உள்பட 82 அலுவலா்கள் 41 குழுக்களாகப் பிரிந்து மீனவ கிராமங்களுக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
நாட்டுப்படகின் பதிவு உரிமம், காப்பீடு, டீசல் புத்தகம் உள்ளிட்டவை முறையாக உள்ளதா, பாதுகாப்பு கருவிகள், அவசர கால கருவிகள் உள்ளதா, படகுகள் இயக்குவதற்கு தகுதியானதாக உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










