» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மீனவா் திடீா் மரணம்: போலீசார் விசாரணை

சனி 15, ஜூன் 2024 7:43:09 AM (IST)

சாத்தான்குளம் அருகே கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று கரை திரும்பிய மீனவா் திடீரென உயிரிழந்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் கல்குளம் கோடிமுனை சைமன் காலனியை சோ்ந்தவா் பிரிமினஸ் (65). மீன்பிடி தொழிலாளி. இவரது மனைவி இறந்துவிட்டாா்; 4 மகன்கள், ஒரு மகள் உள்ளனா். இவா் கடந்த 2 மாதங்களாக பெரியதாழை பகுதியில் மீன்பிடி தொழிலுக்கு சென்று வந்தாா். கடந்த 2ஆம் தேதி பெரியதாழையை சோ்ந்த மானசா, ரூபன், ரோசன் ஆகியோருடன் விசைப்படகில் மீன்பிடிக்க சென்று விட்டு மறுநாள் காலையில் சக மீனவா்களுடன் கடற்கரை திரும்பினாா்.

பின்னா், படகில் இருந்து மீன் வலைகளை இறக்கி கொண்டிருந்த பிரிமினஸ் திடீரென மயங்கி விழுந்தாா். இதையடுத்து, திருச்செந்தூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவா், ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். அவா் மாரடைப்பால் இறந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து அவரது மகன் பெனோரோஸ் ஜீன்சன், குலசேகரன்பட்டினம் கடலோர காவல் படை மூலம் தட்டாா்மடம் போலீஸில் புகாா் அளித்தாா். காவல் உதவி ஆய்வாளா் குரூஸ் மைக்கேல் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறாா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital


CSC Computer Education



Thoothukudi Business Directory