» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கத்தியை காட்டி மிரட்டல்: 2 ரவுடிகள் கைது

வெள்ளி 14, ஜூன் 2024 5:22:35 PM (IST)

தூத்துக்குடியில்  வழிமறித்து பணம் கேட்டு தகராறு செய்து கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்த 2 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர். 

தூத்துக்குடியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன்  உத்தரவின்படி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர்  கேல்கர் சுப்ரமண்ய பால்சந்திரா மேற்பார்வையில் தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு)  பிரேம் ஆனந்த் தலைமையில் சார்பு ஆய்வாளர் மாரிமுத்து மற்றும் போலீசார் நேற்று  ரோந்து பணியில் ஈடுபட்டபோது பிரையண்ட் நகர் பகுதியில் சந்தேககத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரணை செய்தனர்.

அதில்,  விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை, பந்தல்குடி பகுதியைச் சேர்ந்த பொன்னுசாமி மகன் மல்லையா ராஜி (எ) முத்து மல்லையா ராஜி (38) மற்றும் தூத்துக்குடி லெவிஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த முத்துராஜ் மகன் மூர்த்தி (24) ஆகியோர் என்பதும்  அப்பகுதியில் வந்து கொண்டிருந்த ஒருவரை வழிமறித்து பணம் கேட்டு தகராறு செய்து கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்ததும் தெரியவந்தது.

 உடனே மேற்படி போலீசார் எதிரிகளான மல்லையாராஜி (எ) முத்து மல்லையாராஜி மற்றும் மூர்த்தி ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் இதுகுறித்து தென்பாகம் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







New Shape Tailors

CSC Computer Education

Arputham Hospital



Thoothukudi Business Directory