» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சொத்து பிரச்சனை: பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது!
வெள்ளி 14, ஜூன் 2024 4:50:33 PM (IST)
ஏரல் அருகே சொத்து பிரச்சனை தொடர்பாக பெண்ணை அரிவாளால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் திருச்செந்தூர் ரோடு பகுதியைச் சேர்ந்த முருகேசன் மனைவி செண்பகவல்லி (52) என்பவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த அவரது உறவினரான பேச்சிமுத்து மகன் வெங்கடேஸ்வரன் (54) என்பவருக்கும் சொத்து தொடர்பாக பிரச்சனை இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் நேற்று செண்பகவல்லி ஏரல் அருகே சத்திரம் பகுதி அருகே நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த வெங்கடேஸ்வரன், செண்பகவல்லியிடம் தகராறு செய்து அரிவாளால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து செண்பகவல்லி அளித்த புகாரின் பேரில் ஏரல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பழனிசாமி வழக்கு பதிவு செய்து வெங்கடேஸ்வரனை கைது செய்தார். இதுகுறித்து ஏரல் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










