» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சொத்து பிரச்சனை: பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது!

வெள்ளி 14, ஜூன் 2024 4:50:33 PM (IST)

ஏரல் அருகே சொத்து பிரச்சனை தொடர்பாக பெண்ணை அரிவாளால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் திருச்செந்தூர் ரோடு பகுதியைச் சேர்ந்த முருகேசன் மனைவி செண்பகவல்லி (52) என்பவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த அவரது உறவினரான பேச்சிமுத்து மகன் வெங்கடேஸ்வரன் (54) என்பவருக்கும் சொத்து தொடர்பாக பிரச்சனை இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் நேற்று செண்பகவல்லி ஏரல் அருகே சத்திரம் பகுதி அருகே நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த வெங்கடேஸ்வரன், செண்பகவல்லியிடம் தகராறு செய்து அரிவாளால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து செண்பகவல்லி அளித்த புகாரின் பேரில் ஏரல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பழனிசாமி வழக்கு பதிவு செய்து வெங்கடேஸ்வரனை கைது செய்தார். இதுகுறித்து ஏரல் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


CSC Computer Education




Arputham Hospital




Thoothukudi Business Directory