» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

செல்போன் கடையில் திருட முயற்சி: ரவுடி கைது

வெள்ளி 14, ஜூன் 2024 3:27:55 PM (IST)

தூத்துக்குடியில் செல்போன் கடையில் உரிமையாளரை தாக்கி செல்போன் திருட முயன்ற ரவுடியை போலீசார் கைது செய்தனர். 

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் உத்தரவின்படி விளாத்திகுளம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ராமகிருஷ்ணன் மேற்பார்வையில் எட்டையபுரம் காவல் நிலைய ஆய்வாளர் முருகன் தலைமையிலான போலீசார் கடந்த 12.06.2024 அன்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டபோது, கோட்டூர் விலக்கு பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்தனர்.

இதில், அவர் தூத்துக்குடி முத்தையாபுரம் குமாரசாமி நகரை சேர்ந்த ராஜலிங்கம் மகன் சங்கரேஸ்வரன் (25) என்பதும் அவர் அப்பகுதியில் உள்ள ஒரு செல்போன் கடையில் செல்போன் திருட முயற்சி செய்தும், கடை உரிமையாளரை இரும்பு கம்பியால் தாக்க முயன்றும் கொலை முயற்சியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. உடனே போலீசார் சங்கரேஸ்வரனை கைது செய்தனர். 

மேலும் இதுகுறித்து எட்டையபுரம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைது செய்யப்பட்ட சங்கரேஸ்வரன் மீது ஏற்கனவே முத்தையாபுரம் காவல் நிலையத்தில் கொலை முயற்சி, திருட்டு வழக்குகள் உட்பட 20 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital

CSC Computer Education








Thoothukudi Business Directory