» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி புனித அந்தோணியாா் ஆலய திருவிழாவில் சப்பர பவனி
வெள்ளி 14, ஜூன் 2024 12:29:48 PM (IST)

தூத்துக்குடி புனித அந்தோணியார் ஆலய திருவிழாவில் சப்பர பவனி நடைபெற்றது. இதில் திரளான இறைமக்கள் கலந்து கொண்டனா்.
தூத்துக்குடி தருவைக்குளம் கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள புனித அந்தோணியார் ஆலய திருவிழா கடந்த 1ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து விழா நாட்களில் ஜெபமாலை, நற்கருணை ஆசீர் மற்றும் சிறப்பு திருப்பலிகள் நடக்கின்றன. விழாவின் சிகர நிகழ்ச்சியாக சப்பரப்பவனி நேற்று நடைபெற்றது.
இதில் திரளான இறைமக்கள் கலந்து கொண்டனா். தொடா்ந்து ஆடம்பர திருவிழா மாலை ஆராதனை நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை பங்குதந்தை வின்சென்ட், உதவி பங்கு தந்தை ஃப்ரெடின், கட்டளைக்காரா்கள் மற்றும் அருட்சகோதாிகளும் இறைமக்களும் செய்திருந்தனா்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










