» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி அருகே பைக் விபத்தில் வாலிபர் பலி!

வெள்ளி 14, ஜூன் 2024 11:41:13 AM (IST)

தூத்துக்குடி அருகே பைக் விபத்தில் வாலிபர் பரிதாபமாக இறந்தார். 

தூத்துக்குடி அருகே உள்ள உமரி கோட்டை, வரதராஜபுரம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் முருகன் மகன் விக்னேஷ் (23). கூலி தொழிலாளி. இவர் நேற்று மேலத்தட்டபாறையில் இருந்து உமரி கோட்டைக்கு மோட்டார் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது வளைவு ரோட்டில் திரும்பி செல்லும் போது திடீரென பைக் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவல் அறிந்த தட்டப்பாறை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பொறுப்பு வன சுந்தர் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital


CSC Computer Education



Thoothukudi Business Directory