» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஆடு திருடிய 3பேர் கைது: சரக்கு வாகனம் பறிமுதல்!
வெள்ளி 14, ஜூன் 2024 11:32:24 AM (IST)

திருச்செந்தூரில் ஆடு திருடிய 3பேரை போலீசார் கைது செய்து, திருட பயன்படுத்திய சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சண்முகபுரம் பகுதியைச் சேர்ந்த சுந்தரம் மனைவி பேச்சித்தாய் (41) என்பவர் தனது ஆடுகளை வீட்டிற்கு பின்புறம் உள்ள இடத்தில் கட்டி வைத்துள்ளார். இந்நிலையில் மேற்படி கட்டி வைத்திருந்த ஆடுகளில் ஒரு ஆடு கடந்த 08.06.2024 அன்று திருடு போனது பேச்சித்தாய்க்கு தெரியவந்துள்ளது.
இதுகுறித்து பேச்சித்தாய் நேற்று அளித்த புகாரின் பேரில் திருச்செந்தூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து உதவி ஆய்வாளர் சுந்தர் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் வீரபாண்டிய பட்டினம் பகுதியைச் சேர்ந்த முருகன் மகன் பாலமுருகன் (எ) சடையன் (45), பட்டுராஜா மகன் விஜய கோபால் (எ) விஜி (30) மற்றும் திருச்செந்தூர் சண்முகபுரம் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் சேர்மதுரை (33) ஆகியோர் மினி சரக்கு வாகனத்தின் மூலம் மேற்படி ஆட்டை திருடியது தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் 3 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்த திருடப்பட்ட ஆடு மற்றும் திருடுவதற்கு பயன்படுத்தப்பட்ட மினி சரக்கு வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட பாலமுருகன் (எ) சடையன் மீது ஏற்கனவே திருச்செந்தூர் காவல் நிலையத்தில் 2 வழக்குகளும், விஜய கோபால் (எ) விஜி மீது திருச்செந்தூர் காவல் நிலையத்தில் திருட்டு வழக்கு உட்பட 9 வழக்குகளும், ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் ஒரு வழக்கும், சேர்மதுரை மீது திருச்செந்தூர் மற்றும் ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் தலா ஒரு வழக்கும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










