» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திருநங்கைகள் நலவாரிய அட்டை பெற 21ம் தேதி சிறப்பு முகாம் : ஆட்சியர் தகவல்!
வெள்ளி 14, ஜூன் 2024 10:09:01 AM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருநங்கைகள் நலவாரிய அடையாள அட்டை பெற ஏதுவாக வருகின்ற 21ஆம் தேதி சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.

மேலும், திருநங்கைகள் நலவாரியத்தில் இதுவரை பதிவு செய்யாத நபர்கள் பதிவு செய்து நலவாரிய அடையாள அட்டை பெற ஏதுவாக திருநங்கைகள் நல வாரிய அலுவலர் சாரா உறுப்பினர்கள் மற்றும் திருநங்கைகளுக்காக செயல்படும் அதன் தொண்டு நிறுவனங்களைக் கொண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பு முகாம் நடத்த 21.06.2024 அன்று திட்டமிடப்பட்டுள்ளது. இம்முகாமில் திருநங்கைகள் நல வாரியத்தின் அடையாள அட்டை, பெறுவதற்கு பதிவு செய்தல், ஆதார் அட்டையில் திருத்தம், முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், ஆயுஷ்மான் பாரத் திட்டம், வாக்காளர் அடையாள அட்டை ஆகியவை பெற்றிட வழிவகை செய்யப்படவுள்ளது.
மேலும், திருநங்கைகளுக்கு அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகள் அனைத்தும் சென்றடைவதை உறுதி செய்திடும் வகையில் இம் முகாம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் 21.06.2024 அன்று நடைபெறும் முகாமில் அனைத்து திருநங்கைகளும் தவறாமல் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கிணற்றில் கார் கவிழ்ந்து விபத்து: 45 பவுன் நகைகள் மீட்பு
ஞாயிறு 18, மே 2025 6:58:59 PM (IST)

தூத்துக்குடி கடலில் அத்துமீறி மீன் பிடித்த கேரள மீனவர்கள் 17 பேர் கைது : விசைப்படகு பறிமுதல்
ஞாயிறு 18, மே 2025 6:44:19 PM (IST)

தூத்துக்குடியில் போக்குவரத்து சிக்னலை விரைந்து செயல்படுத்த வேண்டும் : சிபிஎம் கோரிக்கை!
ஞாயிறு 18, மே 2025 11:55:44 AM (IST)

திருமண விழாவுக்கு வந்த வாலிபர் லாரி மோதி பலி : கோவில்பட்டியில் பரிதாபம்
ஞாயிறு 18, மே 2025 10:57:41 AM (IST)

தூத்துக்குடியில் சாரல் மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி
ஞாயிறு 18, மே 2025 10:47:27 AM (IST)

தமிழீழ இனப்படுகொலை தினம்: த.வெ.க. அஞ்சலி!
ஞாயிறு 18, மே 2025 10:36:29 AM (IST)
