» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி வ.உ.சி கல்வியியல் கல்லூரியில் தேசிய கருத்தரங்கம்
வெள்ளி 14, ஜூன் 2024 8:01:45 AM (IST)

தூத்துக்குடி வ.உ.சி கல்வியியல் கல்லூரியில் இந்திய மெய்யியல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் வ.உ.சி கல்வியியல் கல்லூரி இணைந்து நடத்திய ஒரு நாள் தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் த.கனகராஐ வரவேற்புரை நிகழ்த்தினார். கருத்தரங்கத்தின் நோக்கவுரையை உயிரறிவியல் துறை உதவிப் பேராசிரியர் ந.அல்லிமுத்து வழங்கினார். நிகழ்வில் கல்லூரியின் முன்னால் முதல்வர் தாமோதரன் வாழ்த்துரை வழங்கினார். இறுதியாக கல்லூரியின் இணைப்பேராசிரியர் பிரேமலதா நன்றியுரை நல்கினார். முதல் அமர்வில் தாமோதரன் சமூகத்தில் தத்துவ நெறிகளின் பயன்பாடுகள் குறித்து கருத்துரை வழங்கினார்.
இரண்டாம் அமர்வில் இந்திராகாந்தி தேசிய மலைவாழ் பல்கலைக்கழக உதவிப்பேராசிரியர் ஹரிஹரன் இந்திய சமூகத்தில் தத்துவத்தின் தாக்கம் குறித்து கருத்துரை வழங்கினார். மூன்றாம் அமர்வில் மதுரை காமராசர் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி இயக்குனர் (பொறுப்பு) பேராசிரியர் முத்துப்பாண்டி இந்திய கலாச்சாரத்தின் சாரம் குறித்து கருத்துரை வழங்கினார்.
நான்காம் அமர்வில் அழகப்பா பல்கலைக்கழக தொலைநிலை மற்றும் இணையவழி கல்வித்துறை போராசிரியர் வாசிமலைராஜா தாகூரின் வாழ்வியல் சிந்தனைகள் மற்றும் சமூகத்தாக்கம் குறித்து கருத்துரை வழங்கினார். நிகழ்வின் இறுதியில் சசிகலா நன்றியுரை வழங்கினார். இக்கருத்தரங்கில் 271 மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் பங்கேற்றனர். இறுதியில் கருத்தரங்கச் செயலர் அல்லிமுத்து கருத்தரங்க அறிக்கை வழங்கி சிறப்பித்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










