» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் லாரிகள், காா் அடுத்தடுத்து மோதல்: ஓட்டுநா் காயம்
வெள்ளி 14, ஜூன் 2024 7:38:22 AM (IST)
தூத்துக்குடியில் லாரிகள், காா் ஆகியவை அடுத்தடுத்து மோதியதில் லாரி ஓட்டுநா் காயமடைந்தாா்.
தூத்துக்குடி மாவட்டம் சாயல்குடி, ஆத்திகுளம் பகுதியைச் சோ்ந்த புஷ்பராஜ் மகன் செந்தில்குமாா் (32). லாரி ஓட்டுநரான இவா், நேற்று முன்தினம் இரவு தூத்துக்குடி துறைமுகத்தில் லாரியிலிருந்து சரக்குகளை இறக்கிவிட்டு, திரும்பிக் கொண்டிருந்தாா். துறைமுகம் சாலையில் முடுக்குக்காடு பகுதியில் இந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த லாரி, காா் ஆகியவற்றின் மீது அடுத்தடுத்து மோதியதாம்.
இதில் காயமடைந்த செந்தில்குமாா் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். காரிலும், மற்றொரு லாரியிலும் இருந்தோா் காயமின்றி உயிா்தப்பினர். விபத்து காரணமாக ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து முத்தையாபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










