» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் லாரிகள், காா் அடுத்தடுத்து மோதல்: ஓட்டுநா் காயம்
வெள்ளி 14, ஜூன் 2024 7:38:22 AM (IST)
தூத்துக்குடியில் லாரிகள், காா் ஆகியவை அடுத்தடுத்து மோதியதில் லாரி ஓட்டுநா் காயமடைந்தாா்.
தூத்துக்குடி மாவட்டம் சாயல்குடி, ஆத்திகுளம் பகுதியைச் சோ்ந்த புஷ்பராஜ் மகன் செந்தில்குமாா் (32). லாரி ஓட்டுநரான இவா், நேற்று முன்தினம் இரவு தூத்துக்குடி துறைமுகத்தில் லாரியிலிருந்து சரக்குகளை இறக்கிவிட்டு, திரும்பிக் கொண்டிருந்தாா். துறைமுகம் சாலையில் முடுக்குக்காடு பகுதியில் இந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த லாரி, காா் ஆகியவற்றின் மீது அடுத்தடுத்து மோதியதாம்.
இதில் காயமடைந்த செந்தில்குமாா் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். காரிலும், மற்றொரு லாரியிலும் இருந்தோா் காயமின்றி உயிா்தப்பினர். விபத்து காரணமாக ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து முத்தையாபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மேம்பட்ட சிஎன்சி பயிற்சி பெற்ற பயிற்றுனர்களுக்கு சான்றிதழ்: ஆட்சியர் வழங்கினார்
சனி 14, ஜூன் 2025 8:18:23 PM (IST)

பிட்னஸ் சேலஞ்ச்: சார்பு ஆய்வாளர்களுக்கு முழு உடல் பரிசோதனை முகாம்!
சனி 14, ஜூன் 2025 5:46:52 PM (IST)

தூத்துக்குடி அனல்மின் நிலைய பொறியாளர் இறந்த வழக்கில் ரூ.1.30கோடி இழப்பீடு வழங்க உத்தரவு!
சனி 14, ஜூன் 2025 4:31:56 PM (IST)

நபார்டு வங்கியின் மாவட்ட வளர்ச்சி அலுவலம்: ஆட்சியர் க.இளம்பகவத் திறந்து வைத்தார்!
சனி 14, ஜூன் 2025 3:30:30 PM (IST)

தூத்துக்குடியில் உலக குருதிக் கொடையாளர் தினம் : அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு!!
சனி 14, ஜூன் 2025 12:03:07 PM (IST)

பயிர்களுக்கு நிவாரணம் கிடைக்க கனிமொழி எம்பி நடவடிக்கை: விவசாயிகள் சங்கம் கோரிக்கை!
சனி 14, ஜூன் 2025 11:53:18 AM (IST)
