» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ரயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை

வியாழன் 13, ஜூன் 2024 9:49:16 PM (IST)

நாலாட்டின்புத்தூர் அருகே ரயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். 

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகா பெருங்குளத்தைச் சேர்ந்த ராமசுப்பிரமணியன் மகன் ஏங்கெல்ஸ் (43) என்பவர் கடந்த ஒரு வருடமாக அவரது மனைவி மற்றும் குழந்தைகளை பிரிந்து வாழ்ந்து வந்தவர். நாலாட்டின்புத்தூர் தனியார் மில்லில் வேலை செய்து வரும் பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு அவருடன் குடும்பம் நடத்தி வந்தவர்.

அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டில் நேற்று இரவு கே.ஆர். மில் அருகில் செல்லும் ரயில் தண்டவாளப்பாதையில் திருநெல்வேலி மார்க்கமாக சென்ற ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச் சம்பவத்திற்கு தூத்துக்குடி ரயில்வே காவல் நிலையத்தில் எஸ்ஐ பெருமாள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors






Arputham Hospital



Thoothukudi Business Directory