» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ரயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை
வியாழன் 13, ஜூன் 2024 9:49:16 PM (IST)
நாலாட்டின்புத்தூர் அருகே ரயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகா பெருங்குளத்தைச் சேர்ந்த ராமசுப்பிரமணியன் மகன் ஏங்கெல்ஸ் (43) என்பவர் கடந்த ஒரு வருடமாக அவரது மனைவி மற்றும் குழந்தைகளை பிரிந்து வாழ்ந்து வந்தவர். நாலாட்டின்புத்தூர் தனியார் மில்லில் வேலை செய்து வரும் பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு அவருடன் குடும்பம் நடத்தி வந்தவர்.
அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டில் நேற்று இரவு கே.ஆர். மில் அருகில் செல்லும் ரயில் தண்டவாளப்பாதையில் திருநெல்வேலி மார்க்கமாக சென்ற ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச் சம்பவத்திற்கு தூத்துக்குடி ரயில்வே காவல் நிலையத்தில் எஸ்ஐ பெருமாள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.