» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் கஞ்சா வழக்கில் 2 பேர் கைது
வியாழன் 13, ஜூன் 2024 5:51:32 PM (IST)
தூத்துக்குடி தாளமுத்துநகர் பகுதியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் உத்தரவின்படி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் கேல்கர் சுப்ரமண்ய பால்சந்திரா மேற்பார்வையில் தாளமுத்துநகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜாமணி மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டபோது, தாளமுத்துநகர் சுனாமி காலனி பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரணை செய்தனர்.
இதில், தூத்துக்குடி சிலுவைப்பட்டி கணபதி நகரைச் சேர்ந்த கனகராஜ் மகன் நாராயணன் நவீன் (19) மற்றும் கோவில்பட்டி கூசாலிபட்டி பகுதியைச் சேர்ந்த முருகன் மகன் சுப்புராஜ் (24) ஆகிய 2பேரும் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. உடனே போலீசார் 2பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்த 200கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து தாளமுத்துநகர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் பாஜகவினர் வீடுகளில் கருப்பு கொடி கட்டி ஆர்ப்பாட்டம்
சனி 22, மார்ச் 2025 4:56:40 PM (IST)

மின்சார வாரியத்தில் 50,000 காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் : பொறியாளர் சங்கம் வலியுறுத்தல்!
சனி 22, மார்ச் 2025 4:23:33 PM (IST)

தூத்துக்குடியில் கனமழையில் வீடு இடிந்து சேதம் : பெரும் உயிர் சேதம் தவிர்ப்பு
சனி 22, மார்ச் 2025 4:08:37 PM (IST)

பெண் குழந்தைகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி நிறைவு : எஸ்பி சான்றிதழ் வழங்கினார்
சனி 22, மார்ச் 2025 4:05:52 PM (IST)

பாரதிய ஜனதா கட்சியின் மண்டல நிர்வாகிகள் தேர்வு
சனி 22, மார்ச் 2025 3:49:11 PM (IST)

டி.சி.டபிள்யூ நிறுவனத்தில் உலக காடுகள் தினம், நீர் வார விழா!
சனி 22, மார்ச் 2025 3:35:31 PM (IST)
