» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
காட்டுப்பகுதியில் ஆண் சடலம்: போலீஸ் விசாரணை!
வியாழன் 13, ஜூன் 2024 10:47:36 AM (IST)
மணியாச்சி அருகே காட்டுப்பகுதியில் கிடந்த ஆண் சடலத்தை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், மணியாச்சி அடுத்துள்ள மேல பாண்டியபுரம் ரயில் நிலையம் அருகே காட்டுப் பகுதியில் ஆண் சடலம் கிடப்பதாக மணியாச்சி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சுதந்திர தேவி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தைக் மீட்டு பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு இறந்து கிடந்தவருக்கு சுமார் 45 வயது இருக்கும். அவர் இறந்து 10 நாட்களுக்கு மேலானதால் உடல் அழுகிய நிலையில் இருந்தது. அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எப்படி இறந்தார் என்பது குறித்து மணியாச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அந்த பகுதியில் காணாமல் போனவர்களின் விவரங்களை சேகரித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கிணற்றில் உயிரிழந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட தீயனைப்பு வீரர்களுக்கு பாராட்டு!!
திங்கள் 19, மே 2025 9:12:26 PM (IST)

பைக்கில் இருந்து தவறி விழுந்த மூதாட்டி பலி!
திங்கள் 19, மே 2025 8:25:46 PM (IST)

தயவுசெய்து இணையதளத்தில் படம் பார்க்காதீர்கள் : தூத்துக்குடியில் நடிகர் சூரி பேட்டி
திங்கள் 19, மே 2025 8:13:32 PM (IST)

அரசு மருத்துவர் பணி நீக்கம்: ரூ.40 லட்சம் அபராதம் - மனித உரிமை ஆணையம் தீர்ப்பு
திங்கள் 19, மே 2025 5:44:03 PM (IST)

அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில் சேர்க்கை : ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்
திங்கள் 19, மே 2025 5:30:27 PM (IST)

தூத்துக்குடி அஞ்சலகங்களில் கங்கை நதி நீர் விற்பனை
திங்கள் 19, மே 2025 5:21:38 PM (IST)
