» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

காட்டுப்பகுதியில் ஆண் சடலம்: போலீஸ் விசாரணை!

வியாழன் 13, ஜூன் 2024 10:47:36 AM (IST)

மணியாச்சி அருகே காட்டுப்பகுதியில் கிடந்த ஆண் சடலத்தை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தூத்துக்குடி மாவட்டம், மணியாச்சி அடுத்துள்ள மேல பாண்டியபுரம் ரயில் நிலையம் அருகே காட்டுப் பகுதியில் ஆண் சடலம் கிடப்பதாக மணியாச்சி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சுதந்திர தேவி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தைக் மீட்டு பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு இறந்து கிடந்தவருக்கு சுமார் 45 வயது இருக்கும். அவர் இறந்து 10 நாட்களுக்கு மேலானதால் உடல் அழுகிய நிலையில் இருந்தது. அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எப்படி இறந்தார் என்பது குறித்து மணியாச்சி  போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அந்த பகுதியில் காணாமல் போனவர்களின் விவரங்களை சேகரித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




CSC Computer Education

New Shape Tailors


Arputham Hospital





Thoothukudi Business Directory