» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தனியார் நிறுவனத்தில் இன்ஜினியர் திடீர் மரணம் : போலீஸ் விசாரணை!

வியாழன் 13, ஜூன் 2024 10:40:57 AM (IST)

எட்டயபுரத்தில் தனியார் நிறுவனத்தில் பணியில் இருந்தபோது மயங்கி விழுந்து மெக்கானிக்கல் இன்ஜினியர் உயிரிழந்தார். 

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் பண்ணிக்கர் குன்று பகுதியைச் சேர்ந்தவர் சங்கரன் மகன் விஷ்ணு சங்கரன் (32), மெக்கானிக்கல் இன்ஜினியரான இவர் தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.

நேற்று வேலையில் இருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை எட்டையாபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து எட்டையாபுரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் முருகன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


New Shape Tailors





Arputham Hospital



Thoothukudi Business Directory