» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.7 லட்சம் இஞ்சி மூட்டை பறிமுதல்: தூத்துக்குடியில் பரபரப்பு

வியாழன் 13, ஜூன் 2024 8:32:25 AM (IST)

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்தப்பட முயன்ற ரூ.7 லட்சம் மதிப்பிலான இஞ்சி மூட்டைகளை சுங்கத் துறையினர் பறிமுதல் செய்தனர்.

தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரையில் சுங்கத் துறையினர் கடந்த 8ஆம் தேதி இரவு ரோந்து சென்றனர். அப்போது, கடற்கரையில் இருந்து சுமாா் 1 கடல் மைல் தொலைவில் படகு நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்தது. அதை சுங்கத் துறையினர் சோதனையிட்டபோது, அதில் இலங்கைக்கு கடத்துவதற்காக 2,460 கிலோ இஞ்சி மூட்டைகள் இருப்பது தெரியவந்தது. 

அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ. 7 லட்சம் எனக் கூறப்படுகிறது. இது தொடா்பாக திரேஸ்புரத்தைச் சோ்ந்த சிலரிடம் சுங்கத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




New Shape Tailors

Arputham Hospital


CSC Computer Education




Thoothukudi Business Directory