» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.7 லட்சம் இஞ்சி மூட்டை பறிமுதல்: தூத்துக்குடியில் பரபரப்பு
வியாழன் 13, ஜூன் 2024 8:32:25 AM (IST)
தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்தப்பட முயன்ற ரூ.7 லட்சம் மதிப்பிலான இஞ்சி மூட்டைகளை சுங்கத் துறையினர் பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரையில் சுங்கத் துறையினர் கடந்த 8ஆம் தேதி இரவு ரோந்து சென்றனர். அப்போது, கடற்கரையில் இருந்து சுமாா் 1 கடல் மைல் தொலைவில் படகு நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்தது. அதை சுங்கத் துறையினர் சோதனையிட்டபோது, அதில் இலங்கைக்கு கடத்துவதற்காக 2,460 கிலோ இஞ்சி மூட்டைகள் இருப்பது தெரியவந்தது.
அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ. 7 லட்சம் எனக் கூறப்படுகிறது. இது தொடா்பாக திரேஸ்புரத்தைச் சோ்ந்த சிலரிடம் சுங்கத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.