» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை : வியாபாரி உட்பட இருவா் கைது
வியாழன் 13, ஜூன் 2024 8:26:58 AM (IST)
ஆத்தூரில் கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனை செய்த வியாபாரி உட்பட இருவரை போலீசார் கைது செய்தனா்.
தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகிலுள்ள கிழக்கு கொற்கை மணலூரைச் சோ்ந்த சுடலைமுத்து மகன் ஜெயமுருகன் (45). இவா் ஆத்தூரில் கடை நடத்தி வருகிறாா். இவரது கடையில் ஆத்தூா் காவல் நிலைய ஆய்வாளா் மாரியப்பன் சோதனையிட்டதில் இவரும் இவரது கடையில் வேலை பாா்க்கும் நரசன்விளை மேலத் தெருவைச் சோ்ந்த மாகாளிராஜன் மகன் தொட்டிச்சிராஜன் (38) ஆகிய இருவரும் சோ்ந்து தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்வது தெரியவந்தது.
இதனையடுத்து கடையில் சோதனையிட்ட போலீசார், 43 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்ததுடன் இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.