» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பைக்கில் கடத்திய 200 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: இளைஞா் கைது
வியாழன் 13, ஜூன் 2024 8:14:05 AM (IST)
கோவில்பட்டியில் பைக்கில் 200 கிலோ ரேஷன் அரிசியை கடத்திச் சென்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி தனிப்பிரிவு உதவி ஆய்வாளா் ஸ்டீபன் மற்றும் தனிப் பிரிவு காவலா் முத்துமாரி ஆகியோா் நேற்று செக்கடி தெரு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது 4 மூட்டைகளுடன் பைக்கில் வந்த இளைஞரை நிறுத்தி சோதனையிட்டபோது, மூட்டைகளில் ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது.
விசாரணையில் அவா் வள்ளுவா் நகரைச் சோ்ந்த கருப்பசாமி மகன் மகாராஜா (21) என்பதும் அவா் அதிக விலைக்கு ரேஷன் அரிசியை விற்பனைக்கு கொண்டு செல்வது தெரிய வந்ததை அடுத்து அவரை பிடித்து கிழக்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். கிழக்கு காவல் நிலைய போலீசார் மகாராஜாவை கைது செய்து, அவா் வைத்திருந்த சுமாா் 200 கிலோ ரேஷன் அரிசி, பைக்கை பறிமுதல் செய்து, உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.