» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பைக்கில் கடத்திய 200 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: இளைஞா் கைது
வியாழன் 13, ஜூன் 2024 8:14:05 AM (IST)
கோவில்பட்டியில் பைக்கில் 200 கிலோ ரேஷன் அரிசியை கடத்திச் சென்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி தனிப்பிரிவு உதவி ஆய்வாளா் ஸ்டீபன் மற்றும் தனிப் பிரிவு காவலா் முத்துமாரி ஆகியோா் நேற்று செக்கடி தெரு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது 4 மூட்டைகளுடன் பைக்கில் வந்த இளைஞரை நிறுத்தி சோதனையிட்டபோது, மூட்டைகளில் ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது.
விசாரணையில் அவா் வள்ளுவா் நகரைச் சோ்ந்த கருப்பசாமி மகன் மகாராஜா (21) என்பதும் அவா் அதிக விலைக்கு ரேஷன் அரிசியை விற்பனைக்கு கொண்டு செல்வது தெரிய வந்ததை அடுத்து அவரை பிடித்து கிழக்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். கிழக்கு காவல் நிலைய போலீசார் மகாராஜாவை கைது செய்து, அவா் வைத்திருந்த சுமாா் 200 கிலோ ரேஷன் அரிசி, பைக்கை பறிமுதல் செய்து, உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










