» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சட்ட விரோத மது விற்பனை: 12 போ் கைது
வியாழன் 13, ஜூன் 2024 8:02:39 AM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் சட்ட விரோத மது விற்னையில் ஈடுபட்டதாக 12 பேரை போலீசார் கைது செய்தனர்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எல். பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில், சட்ட விரோத மது விற்பனையைத் தடுக்க போலீசார் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அதன்படி, மாவட்டம் முழுவதும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது, மது விற்பனையில் ஈடுபட்டதாக 12 பேரைக் கைது செய்து, 170 மது பாட்டில்கள், ரூ. 7,420-ஐ பறிமுதல் செய்தனர்.