» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் டாஸ்மாக் ஊழியர்களை மிரட்டி மதுபானம் திருட்டு... பரபரப்பு குற்றச்சாட்டு!

செவ்வாய் 11, ஜூன் 2024 5:50:48 PM (IST)

தூத்துக்குடியில் இரும்பு கம்பியை வைத்து டாஸ்மாக் ஊழியர்களை மிரட்டி பிரபல ரவுடி மது பாட்டில்களை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தூத்துக்குடி மாநகரின் இரண்டாம் கேட் அருகே நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது அரசு மதுபான கடை ஒன்று இந்த மதுபான கடையில் நேற்று மாலை சுமார் 4 மணி அளவில் மதுபான கிட்டங்கியிலிருந்து மதுபானங்கள் லாரியில் வந்து இறக்கப்பட்டு கொண்டிருந்தது. இதற்காக டாஸ்மாக் ஊழியர்கள் கடையின் கதவை திறந்து வைத்து மதுபான பெட்டிகளை கடைக்குள் இறக்கி வைத்துவிட்டு லாரி மற்றும் ஊழியர்கள் சென்றுள்ளனர் 

இதைத் தொடர்ந்து திடீரென அந்த பகுதியைச் சேர்ந்த பல்வேறு அடிதடி வழக்குகள் நிலுவையில் உள்ள பிரபல ரவுடி ஜேம்ஸ் என்ற நபர் இரும்பு கம்பியுடன் மது போதையில் டாஸ்மாக் கடைக்குள் நுழைந்து டாஸ்மாக் ஊழியர்களை மிரட்டியவாறு கடைக்குள் இருந்த பெட்டியில் இருந்து சுமார் 2000 ரூபாய் மதிப்புள்ள மது பாட்டில்களை எடுத்து சென்றுள்ளார். இதை தடுக்க முயன்ற டாஸ்மாக் ஊழியர்களை அவர் கொலை மிரட்டல் விடுத்து சென்றுள்ளதுடன் கல்லாலும் தாக்க முயற்சி செய்துள்ளார். இந்த சம்பவம்தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

ஏற்கனவே கடந்த ஜனவரி மாதம் இதே போன்று இந்த கடையில் டாஸ்மாக் ஊழியர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி ஜேம்ஸ் சுமார் 5000 ரூபாய் மதிப்பிலான மது பாட்டில்களை எடுத்துச் சென்ற சம்பவம் குறித்து காவல்துறையில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. 

தூத்துக்குடியில் அரசு மதுபான கடையில் பணிபுரியும் டாஸ்மாக் ஊழியர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே காவல் துறை இந்த விஷயத்தில் தலையிட்டு சம்பந்தப்பட்ட ரவுடியை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

மயில்கள் மர்ம சாவு: வனத்துறை விசாரணை!

செவ்வாய் 22, அக்டோபர் 2024 4:52:29 PM (IST)

Sponsored Ads






Arputham Hospital

New Shape Tailors



Thoothukudi Business Directory