» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பாதாள சாக்கடை மூடியால் விபத்து அபாயம் : தூத்துக்குடியில் வாகன ஓட்டிகள் அச்சம்
செவ்வாய் 11, ஜூன் 2024 5:09:47 PM (IST)
தூத்துக்குடியில் பிரதான சாலையில் பாதாள சாக்கடை மூடி பழுந்தடைந்த நிலையில் உள்ளதால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி எட்டையாபுரம் சாலை, ஏபிசி மகாலட்சுமி மகளிர் கல்லூரி பின்புறத்தில் உள்ள கமாக் பள்ளிக்கு தினம்தோறும் நூற்றுக்கணக்கான பள்ளி மாணவர்கள் இரு சக்கரம், நான்கு சக்கரம், ஆட்டோக்கள், மற்றும் பள்ளி பேருந்துகளில் பள்ளிக்கு படிக்க வருகின்றனர். கோடை விடுமுறைக்கு பின்னர் பள்ளிகள் திறந்து இரண்டு நாட்கள் தான் ஆகின்றது.
இந்நிலையில், அப்பகுதியில் பிரதான சாலையின் நடுவே உள்ள பாதாள சாக்கடை தொட்டியின் மூடி சேதமடைந்துள்ளது. இதனால் அதில் கம்பு ஊன்றப்பட்டுள்ளது. இதனை அறியாமல் வரக்கூடிய வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே பழுதடைந்து காட்சியளிக்கும் பாதாள சாக்கடை தொட்டிைய சரி செய்ய வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஏரியா காரன்Jun 11, 2024 - 05:27:49 PM | Posted IP 172.7*****