» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் மீன்களின் விலை கடும் உயர்வு: அலைமோதிய மக்கள் கூட்டம்!!!
சனி 25, மே 2024 7:52:02 PM (IST)

தூத்துக்குடியில் நாட்டுப் படகுகள் கடலுக்குச் செல்லாத காரணத்தினால் மீன்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் மற்றும் கடல் பகுதியில் பலத்த காற்று வீச கூடும் என்பதால் நாட்டுப் படகு மற்றும் பைபர் படகு மீனவர்கள் ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடிக்க மீன்வளத்துறை வருகிற 27ஆம் தேதி வரை தடை விதித்துள்ளது இதன் காரணமாக நாட்டு படகு மற்றும் பைபர் படகுகள் மீன்பிடி துறைமுகங்களில் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடந்த 23ஆம் தேதிக்கு முன்பாக ஆழ்கடல் மீன்பிடிப்பிற்கு சென்ற படகுகள் இன்று கரை திரும்பின. ஆனால் கடல் பகுதியில் வீசிய பலத்த காற்று காரணமாக தங்கு கடலுக்கு சென்று விட்டு வந்த நாட்டுப்படகுகளில் குறைவான மீன்களே இருந்ததால் மீன்பிடி துறைமுகத்திற்கு மீன்களின் வரத்து குறைவாக காணப்பட்டது.
இன்று சனிக்கிழமை மற்றும் விடுமுறை தினம் என்பதால் மீன்களை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது. மீன்களின் வரத்து குறைவாக காணப்பட்டதால் மீன்களின் விலை வரலாறு காணாத அளவு உயர்ந்து காணப்பட்டது. சீலா மீன் ஒரு கிலோ 1500 முதல் 2000 ரூபாய் வரையும், விளைமீன் கிலோ 700 முதல் 750 ரூபாய் வரையும், ஊளி மீன் கிலோ 700 ரூபாய் வரையும், பாறை கிலோ 700 ரூபாய் வரையும், குருவளை கிலோ 350 ரூபாய் வரையும், சாலை ஒரு கூடை நேற்று 5,500 ருபாய் விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று 6 ஆயிரம் ரூபாய் வரையும் விற்பனையானது.

மீன்களின் விலை அதிகரித்து காணப்பட்ட நிலையிலும் மீன்களின் வரத்து குறைவாக காணப்பட்டதால் மீனவர்கள் கவலை அடைந்தனர். வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் முடிவுக்கு வந்த பின்பு நாட்டுப்படகுகள் கடலுக்குச் சென்ற பின்பு இந்த மீன் விலை குறையும் என மீனவர்கள் தெரிவித்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஓடும் பஸ்சில் பிக் பாக்கெட்: 2 பெண்கள் கைது
சனி 15, மார்ச் 2025 8:17:29 PM (IST)

நகைக்கடை அதிபர் மகனை கடத்தி கொலை செய்ய திட்டம் : தூத்துக்குடியைச் சேர்ந்த 5 பேர் கைது
சனி 15, மார்ச் 2025 8:12:56 PM (IST)

புனித வெள்ளி அன்று மதுக்கடைகளை மூட அரசாணை : எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்த கோரிக்கை!!
சனி 15, மார்ச் 2025 7:55:53 PM (IST)

சர்வதேச திரைப்பட விழாவில் முதலிடத்தை வென்ற திரு குறும்பட குழுவினருக்கு மேயர் வாழ்த்து
சனி 15, மார்ச் 2025 7:50:21 PM (IST)

மக்கள் தொடர்பு திட்ட முகாமில் ரூ.77.41 லட்சம் நலத்திட்ட உதவிகள் : ஆட்சியர் க.இளம்பகவத் வழங்கினார்
சனி 15, மார்ச் 2025 4:23:44 PM (IST)

தூத்துக்குடி சிக்னல் பகுதியில் மேற்கூரை : மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு
சனி 15, மார்ச் 2025 4:16:33 PM (IST)
