» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி விஎம்எஸ் நகரில் குடிநீர் பிரச்சனை : மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு!

சனி 25, மே 2024 4:45:42 PM (IST)



தூத்துக்குடி விஎம்எஸ் நகரில் குடிநீர் பிரச்சனை தொடர்பாக மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார். 

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட வி.எம்.எஸ் நகர் பகுதியை சார்ந்த பொதுமக்கள் தங்கள் பகுதியில் குடிநீர் முறையாக வரவில்லை என்று மேயரிடம் தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து மேயர் ஜெகன் பெரியசாமி நேரடியாக அந்தப் பகுதியில் அமைந்துள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டியை ஆய்வு செய்தார்.

மேலும், முறையான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரட்டார். ஆய்வின் போது திமுக வட்ட செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன், மாவட்ட சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளர் மரிய அந்தோணி, மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



CSC Computer Education

Arputham Hospital

New Shape Tailors






Thoothukudi Business Directory