» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
காற்றாலை நிறுவன வாகனங்கள் சேதம்: ஒருவா் கைது
சனி 25, மே 2024 12:36:44 PM (IST)
கயத்தாறு அருகே காற்றாலை நிறுவன வேன், லாரி கண்ணாடிகளை சேதப்படுத்திய வழக்கில் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே காப்புலிங்கம்பட்டியில் உள்ள 3 கிராம சா்வே எண்ணில் காற்றாலை நிறுவும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அப்பணிகளை கண்காணிப்பதற்கு 2 காவலா்களையும் காற்றாலை நிறுவனத்தினா் நியமித்துள்ளனா். இந்நிலையில், சம்பவதன்று அங்கு வந்த 2 போ் காவலா்களை அவதூறாகப் பேசி அங்கு நின்றிருந்த வேன் மற்றும் லாரி கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தினராம்.
இதை தடுக்க சென்ற காவலா்களை அவதூறாகப் பேசி, கொலை மிரட்டல் விடுத்து விட்டு தப்பினராம். இதுகுறித்து காற்றாலை நிறுவனத்தில் ‘செக்யூரிட்டி சா்வீஸ்’ நிறுவன மேலாளா் தங்கப்பாண்டியன் அளித்த புகாரின் பேரில் கயத்தாறு போலீசார் நேற்று வழக்குப்பதிந்து, காப்புலிங்கம்பட்டி தெற்குத் தெருவை சோ்ந்த ராமராஜன் மகன் மகாராஜன்(38) என்பவரை கைது செய்தனர். மேலும் கிருஷ்ணசாமி என்பவரை தேடி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி: அழகர் பப்ளிக் பள்ளி அணி வெற்றி
செவ்வாய் 18, பிப்ரவரி 2025 8:08:36 PM (IST)

குழந்தைகள் பாதுகாப்பு அலகில் பணியிடங்கள் : பிப்.28க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு
செவ்வாய் 18, பிப்ரவரி 2025 4:29:10 PM (IST)

ரேஷன் கடைகளில் விரல் ரேகைகளை பதிவு செய்ய வேண்டும்: ஆட்சியர் அறிவிப்பு
செவ்வாய் 18, பிப்ரவரி 2025 3:59:30 PM (IST)

தூத்துக்குடி சிவன் கோவிலில் பிப்.26ல் மகா சிவராத்திரி விழா
செவ்வாய் 18, பிப்ரவரி 2025 3:33:55 PM (IST)

காவல்துறை சார்பில் நாளை பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: எஸ்பி தகவல்!!
செவ்வாய் 18, பிப்ரவரி 2025 3:20:12 PM (IST)

பள்ளி முன்பு பெற்றோர்கள் திடீர் சாலை மறியல் போராட்டம் : தூத்துக்குடியில் பரபரப்பு!!
செவ்வாய் 18, பிப்ரவரி 2025 3:04:40 PM (IST)
